இடுகைகள்

மே, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அதிகாரம் 2 – வான்சிறப்பு

படம்
குறள் 11:  வானின் றுலகம் வழங்கி வருதலால்  தானமிழ்தம் என்றுணரற் பாற்று  மு.வ விளக்கம்:  மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்  சாலமன் பாப்பையா விளக்கம்:  உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம் கலைஞர் விளக்கம்:   உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது. குறள் 12:  துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்  துப்பாய தூஉ மழை  மு.வ விளக்கம்: உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை  விளைவித்துத்  தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும் கலைஞர் விளக்கம்: யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது குறள் 13:   விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின் றுடற்றும் பசி  மு.வ விளக்கம்:   மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக ...