இடுகைகள்

thirukkural லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குறள் 13: விண்இன்று பொய்ப்பின்

படம்
 குறள் 13: விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின் றுடற்றும் பசி மு.வ விளக்கம்: மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும் கலைஞர் விளக்கம்: கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்    கதை : நகுலன் தனியார் துறையில கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்தான் .  அவனின் பணியே ஆறு ஏரி குளங்களை பிளாட் போட்டு விற்று கொடுப்பது. அதில் நல்ல லாபமும் பார்த்தான் . நாடு முழுவதும் தொழிற்சாலைகள் வணிக வளாகங்கள் அதிகரிக்க அதிகரிக்க மரம், இயற்கை இவற்றின் தேவைகள் மனிதனின் கண்களுக்கு புலப்படவில்லை .  இதற்கு நகுலனும் விதி விலக்கல்ல . தனக்கு சொந்தமான விளை நிலங்களை கூட விற்று விட்டு வசதியாக வாழ்ந்து கொண்டிருந்தான் .  பருவ காலம் மட்டும் தாமதித்து கொண்டிருக்குமா ? அதுவும் தன் வேலையை காட்ட தொடங்கி இருந்தது . மழைக்காலம் வந்தால் அதீத மழை பொலிவும் வெயில் காலம் வந்தால் தாங்க முடியாத வெப்பமும் நிலவியது .  ஊரெங்கும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு .  அரிசி பருப்...

குறள் 11- கதை 11

படம்
  குறள் 11:  வானின் றுலகம் வழங்கி வருதலால்  தானமிழ்தம் என்றுணரற் பாற்று  மு.வ விளக்கம்:  மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்  சாலமன் பாப்பையா விளக்கம்:  உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம் கலைஞர் விளக்கம்:   உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.   கதை : கண்ணன் மாடி குடியிருப்பில் வசித்து வந்தான். அவன் தங்கியிருக்கும் வீட்டிற்கு மேல் வேறு வீடு இல்லை. ஆதலால் வெப்பம் கீழிறங்கியது. அவன் பெற்றோர்கள் கிராமத்தில் வசித்து வந்தனர். கண்ணனுக்கு அந்த வீட்டில்  மிகவும் வியர்வை அதிகமாக இருந்தது. வேறு வீடு மாறலாம் என்றாலும் எங்கு சென்றாலும் இதே நிலைமைதான். அவனுக்கு கிராமத்திற்கு சென்று வர வேண்டும் என்று தோன்றியதால் விடுப்பு எடுத்து கொண்டு வீட்டிற்கு சென்றான். அப்போது அவன் பெற்றோரிடம் அவன் இருக்கும் வீட்டையும் வெயிலையும் எடுத்து சொன்னான். கிராமத்தில் அவன் இருக்கும் வீட்டில் பின் புறத்தில் பெ...

அதிகாரம் 2 – வான்சிறப்பு

படம்
குறள் 11:  வானின் றுலகம் வழங்கி வருதலால்  தானமிழ்தம் என்றுணரற் பாற்று  மு.வ விளக்கம்:  மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்  சாலமன் பாப்பையா விளக்கம்:  உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம் கலைஞர் விளக்கம்:   உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது. குறள் 12:  துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்  துப்பாய தூஉ மழை  மு.வ விளக்கம்: உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை  விளைவித்துத்  தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும் கலைஞர் விளக்கம்: யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது குறள் 13:   விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின் றுடற்றும் பசி  மு.வ விளக்கம்:   மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக ...

குறள் 10 - கதை 10

படம்
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். மு. வரதராசன் உரை :  இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது. சாலமன் பாப்பையா உரை :  கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார் கலைஞர் உரை :  வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்   கதை : ஒரு ஊர்ல கண்ணதாசன் அப்படினு ஒருத்தர் இருந்தாரு. அவருக்கு இப்போ அறுபது வயது. அவருக்கு மகிழன் னு ஒரு பையன் இருந்தான். அவனுக்கு வயது 25. இன்றைக்கு மகிழன் வாழ்க்கையில ஒரு முக்கியமான நாள்.  ஆம், மகிழனுக்கு ஒரு மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனத்துல நல்ல சம்பளத்துள வேலை கிடைச்சுருக்கு. இந்த மகிழ்ச்சியான செய்தியோடு மகிழன் சைக்கிளை மிதித்துக்கொண்டு வேகமாக பீமாராஜ் ஆசிரியரை சந்திக்க சென்றான்.  பீமாராஜ் ஆசிரியர்தான் மகிழனின் உயர்ந்த நிலைக்கு காரணம். ஆம்,  பீமாராஜ் வாத்தியார்தான் மகிழன் 10 முதல் 12 வகுப்பு...

குறள் 9 - கதை 9

படம்
குறள் 9 : கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. சாலமன் பாப்பையா விளக்கம்: எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே கலைஞர் விளக்கம்: உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும் கதை: ஒரு ஊரில் சின்னப்பன் என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் சிறுவயதிலேயே மதுவிற்கு அடிமை ஆனான். அதே ஊரில் கண்ணப்பன் என்பவன் வாழ்ந்து வந்தான். சின்னப்பன் , கண்ணப்பனும் ஒன்றாக படித்தவர்கள். கண்ணப்பன் சிறுவயது முதலே நன்றாக படித்து வந்தான். பெரியவர்களின் சொல் கேட்டு அவர்கள் கூறும் வழியில் நடந்து இன்று பெரிய வேலையில் உள்ளான். ஆனால் சின்னப்பன் மதுவிற்கு அடிமையானதால் ஒழுங்காகப் படிக்க முடியவில்லை. அவன் மனம் போன போக்கிலே வாழ்ந்து வந்தான். அவனது பெற்றோர் சொல் பேச்சு கேட்க வில்லை பெரியவர்கள் சொல்பேச்சு கேட்க வில்லை. ஒருநாள் மது அருந்திவிட்டு ஒரு சாக்கடையில் விழுந்து கிடந்தான்....

குறள் 8 - கதை 8

படம்
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது. மு.வரதராசன் விளக்கம்: அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது. சாலமன் பாப்பையா விளக்கம்: அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம். சிவயோகி சிவக்குமார் விளக்கம்: முடிவை புரிந்துகொண்ட இயல்பானவன் நிழல் அடையாவிட்டால் பிறவி அறுப்பது கடினம். கதை : ஒரு ஊரில் ஒரு காகம் இருந்தது. தான் மிகவும் கருப்பாக இருப்பதாக நினைத்து கவலை பட்டது. இதனால் புறாக்களிடம் போய் நட்பு கொண்டது. புறாக்கள் காகம் கருப்பாக இருப்பதால் அதனை கேலியும் கிண்டலும் செய்தன. ஆனால் அதை பற்றி அந்த காக்கை குஞ்சி கவலை பட வில்லை. தன்னை ஒரு புறவாக நினைத்து தன் கூட்டத்தில் இருந்து விலகியே இருந்தது. இதனை பார்த்து வருந்திய காக்கை கூட்டத்தின் தலைவன் அந்த காக்கை குஞ்சிடம் நீ காக்கை இனம். காக்கைகளின் குணம் தான் உன்னிடம் இருக்கும்.புறாக்களிடம் பழகுவதால் உன் தன்மையோ குணமோ மாற போவதில்லை என கூறியது. இதையெல்லாம் அந்த காக்கை குஞ்சி காதில...

குறள் 7 - கதை 7

படம்
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. விளக்கம்: ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை. மு.வரதராசனார் தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது. சாலமன் பாப்பையா தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம். கலைஞர் ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை. கதை: ராம் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான். இந்த நிறுவனத்தில் சேரும் முன் அவனுக்கு வேறு எங்குமே வேலை கிடைக்கவில்லை. ஏறி இறங்காத அலுவலகங்களே இல்லை. ஒரு கட்டத்தில் தனக்கு வேலை கிடைக்காது என்ற எண்ணத்தில் ஊருக்கு செல்ல முடிவெடுத்தான். அப்போது அவன் தங்கி இருக்கு அறையின் ஜன்னலில் அமர்ந்து சாலையை பார்த்து கொண்டு இருந்தான். அப்போது ஒரு கண் தெரியாத ஒருவர் பேனா விற்று கொண்டிருந்தார். இவரிடம் போய் இந்த பேனாவை யார் வாங்க போகிறார்கள் என்று நினைத்து தானே ...

பார்வையாளர்கள் கவனத்திற்கு

 பார்வையாளர்கள் கவனத்திற்கு:  தங்களது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. நீங்கள் இடும் கருத்துக்கள் என் சரி தவறுகளை கண்டறிந்து மேலும் முன்னேற ஒரு வாய்ப்பாக அமையும். பார்வையிட்டதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

குறள் 6 - கதை 6

படம்
 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். விளக்கம்: மு.வ : ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர் சாலமன் பாப்பையா : மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார் கதை: ஒரு ஊரில் மனோகர் என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் எப்பொழுதும் ஆடம்பரமாக வாழ ஆசை படுபவன். கண்களுக்கு பிடித்த பொருள்களையெல்லாம் வாங்கி வைப்பான்.அவன் செவிகளில் யாராவது அவனை விட விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி விட்டார்கள் என தெரிந்தால் போதும் உடனே அதை எப்படியாது அடைய முயற்சிப்பான். மூக்கை துளைக்கும் வாசனை திரவியமும் வாய்க்கு ருசியான சாப்பாடு என ஐம்புலன்களையும் அடக்க தெரியாமல் வாழந்து வந்தான். அதே ஊரில் செல்வம் என்பவன் இருந்தான். தான் தினம் சம்பாதித்து வரும் பணத்தில் தனது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வான். அவன் மனம் எப்பொழுதும் எதற்கும் ஆசைப்பட்டது இல்லை.  மனோகரிடம் என்ன வசதி இருந்தாலும் எவ்வளவு பணம் இருந்தாலு...

குறள் 5 - கதை 5

படம்
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. விளக்கம்: கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம், அறியாமையால் வரும் நல்வினை, தீவினை ஆகிய இரு வினைகளும் வந்து சேர்வதில்லை. கதை: ஒரு ஊர்ல கந்தன்  என்பவன் வாழந்து வந்தான். அவன் ஒரு வாத்து  வைத்து வளர்த்து வந்தான். தினம் வாத்துக்கு  நல்ல தீனியிட்டு பராமரித்து வந்தான். கடவுள் பக்தியிலும் அவன் மிகுந்த ஆர்வமுடையவனாய் திகழ்ந்தான். மனமகிழ்ந்த கடவுள் அவனுக்கு வேண்டிய வரம் வழங்க அவன் முன் தோன்றினார். அப்போது கந்தன் நீங்கள் என் கண் முன் தோன்றியது பெரிய வரம். எனக்கு இதை விட பெரிய வரம் வேண்டாம் என்று கூறினான். தினம் உங்கள் பாதங்களை வணங்கி தொழுவதே பெரிய பாக்கியம் என்றும் கூறினான். இதனால் கடவுள் மனமகிழ்ந்து கடவுளாகிய எனையும், எனக்கு இணையான மனதின் பேச்சையும் கேட்டு நடப்பவர்கள் வாழ்வில் எந்த வித துன்பமும் அவனை அறியாமல் வந்து சேராது என கூறினார். அதோடு பொன் முட்டை இடும் வாத்தையும் கொடுத்து விட்டு சென்றார்.அந்த வாத்தை உபயோகித்து ஊரில் உள்ள அனைவருக்கும் அவனால் இயன்ற உதவிகளையும் புரிந்து வந்தான். எனவே நம் மன...

குறள் 4 - கதை 4

படம்
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல . விளக்கம்:    தேவை தேவையற்றது என்று பாரபட்சம் பார்க்காதவரை அடைந்தவருக்கு துன்பம் என்றும் இல்லை. கதை: ஒரு விவசாயி தன் வீட்டில் ஆடுகள் நிறைய வளர்த்து வந்தார். அதில் உள்ள வயதில் மூத்த ஆடு எப்போதுமே தன் முதலாளி எங்கு கூட்டி செல்கிறாரோ அங்கேயே மேயும். அந்த மூத்த ஆட்டினையே பின்பற்றி மற்ற ஆடுகளும் மேயும். இதில் ஒரு ஆட்டுக்கு மட்டும் விருப்பம் இல்லை. எப்போது பார்த்தாலும் ஒரே இடத்திற்கு செல்வது சலிப்பாக உள்ளது. எதிர் வீட்டு தோட்டத்தில் எவ்வளவு பச்சை புற்கள் நிறைந்துள்ளன. அவை மட்டும் கிடைத்தால் எப்படி இருக்கும் என நினைத்தது மட்டும் இல்லாமல் தனக்கு கூட்டாளியாக சில ஆடுககளை சேர்த்து கொண்டது.   விவசாயி வழக்கம் போல் தன் ஆடுகளை மேய்ச்சலுக்கு இட்டு சென்றார். திட்டம் போட்ட ஆடும் அதன் கூட்டாளிகளும் எதிர்த்த வீட்டு தோட்டத்திற்கு தாவி குதித்து ஓடியது. அங்கு காவலாளி குச்சியை எடுத்து அடித்ததில் ஆட்டுக்கு கால் ஒடிந்தது.  தன் விருப்பு வெறுப்புகளை துறந்து மூத்த ஆடு பின் சென்ற மற்ற ஆடுகள் நிம்மதியாக சுற்றி திரிந்தன. தன் விருப்ப...

குறள் 3 - கதை 3

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். மலராகிய உள்ளத்தில் உறையும் கடவுளின் உபதேசத்தை அடைந்தவர் இந்தப் பூமியில் நீண்ட காலம் வாழ்வார்.   ரவியும் ராகுலும் சிறந்த நண்பர்கள். அவர்களின் பெற்றோர்கள் எப்பொழுதும் சிறந்த அறிவுரைகளை கூறுவார்கள். இருவரும் பெற்றோரின் பேச்சை மீறியதில்லை. தற்போது 9ம் வகுப்பிற்கு தேர்ச்சி பெற்று வேறு பள்ளியில் சேர்ந்தனர். அங்கு சில மோசமான நண்பர்களின் பழக்கத்தால் ராகுலின் பாதை மாறியது. படிப்பில் கவனம் சிதறியது. கடவுளுக்கு சமமான பெற்றோரின் பேச்சை அவன் மதிக்கவில்லை.  தேர்வுகளில் தோல்வியுற்றான். ராகுலின் பெற்றோர் அவனுக்கு அறிவுரை வழங்கினார்கள். ஆனால் அது எதையுமே அவன் காதில் வாங்கி கொள்வதாய் இல்லை. ஆனால் ரவியோ வேறு எங்கும் கவனம் சிதறாமல் படிப்பில் ஆர்வமாய் இருந்தான். பெற்றோரின் அறிவுரைக்கேற்ப நடந்து வகுப்பில் முதல் மாணவனாய் திகழ்ந்தான் . எனவே கடவுளுக்கு சமமான பெற்றோரின் உபதேசங்களை கேட்டு நடப்பவர்கள் இந்த உலகில் மகிழ்ச்சியாய் நீண்ட காலம் வாழ்வர் .

திருக்குறள்- அறத்துப்பால்-கடவுள் வாழ்த்து

அதிகார விளக்கம் கடவுள் உண்டு. இந்த உலகத்துக்குத் துவக்கமாக இருப்பது கடவுள்தான். கடவுளை பகுத்து அறிந்தவனை நாடி புரிந்துகொள்ளாமல் படிப்பதால் எந்தப் பயனும் இல்லை. அறிந்தவன், மலராகிய உபதேசப் பொருளில் நின்று வாழ்வான். தேவையானவர் - தேவை அற்றவர் என்ற பாகுபாடுகளை கடந்த அவரே குரு. அறியாமையை உண்டாக்கும் இரு வினைகளை கடந்தவனே இறைமையைப் புரிந்து புகழை அடைகிறான். பொறிகளுக்கு நன்றியுடன் இருந்து பொய் அற்று வாழ்பவன், சிறந்த வாழ்வை வாழ்பவனாவான். நிகரற்ற தனது உபதேசப் பொருளை அடையாமல், மனக்கவலையை மாற்றுவது இயலாது. அப்படி அறமுடன் இருப்பவரை அறிந்தால், பிறவித் துன்பமும் போகும். கோள்களைக் காட்டிலும் மேலான குணங்கள் படைத்தவரை வணங்குவது நல்லது. பிறவி என்ற பெரிய கடலைக் கடக்க இறைவனின் துணை அவசியம்.    1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.    அ என்ற எழுத்துக்கு முதலாவதுபோல, ஆதியில் பகுக்க முடியாத வானத்தை (பகவான்) முதலாகக் கொண்டது இந்த உலகம். 2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். பகுத்து அறிந்தவன் பாதம் பற்றவில்லை என்றால் படித்து என்ன பயன்? 3...

குறள் 2 - கதை 2

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்  தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன? கதை விளக்கம் : வாசு ஒரு பெரிய நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்து இருந்தான். அவன் வேலைக்கு சேர்ந்ததில் இருந்து தற்பெருமை தலைக்கேறி கொண்டது. தான்தான் உயர்ந்தவன் தன்னால் மட்டுமே எல்லாம் முடியும் என்று அடுத்தவர்களை உதாசீன படுத்தினான். எப்போதும் சிடு சிடு என்று பேசிக்கொண்டு யாரிடமும் மரியாதையாக நடந்துகொள்ளாமல் தலை கணமாய் இருந்தான். இதனால் சக ஊழியர்கள் அவனை பற்றி மேலிடத்தில் புகார் செய்தனர் . அலுவலகத்தில் அவனை இடை நீக்கம் செய்து தண்டனை கொடுக்கப்பட்டது. நாம் என்னதான் கல்வி பயின்றாலும் நல்ல வேலையில் இருந்தாலும் கடவுளிடமும் சக மனிதர்களிடத்திலும் அன்பு கொள்ளாமல் இருந்தால் அது தீமையிலேயே போய்  முடியும் .