குறள் 13: விண்இன்று பொய்ப்பின்

 குறள் 13:

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உள்நின் றுடற்றும் பசி

மு.வ விளக்கம்:

மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்

கலைஞர் விளக்கம்:

கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும் 

 கதை :



நகுலன் தனியார் துறையில கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்தான் .  அவனின் பணியே ஆறு ஏரி குளங்களை பிளாட் போட்டு விற்று கொடுப்பது. அதில் நல்ல லாபமும் பார்த்தான் . நாடு முழுவதும் தொழிற்சாலைகள் வணிக வளாகங்கள் அதிகரிக்க அதிகரிக்க மரம், இயற்கை இவற்றின் தேவைகள் மனிதனின் கண்களுக்கு புலப்படவில்லை .  இதற்கு நகுலனும் விதி விலக்கல்ல . தனக்கு சொந்தமான விளை நிலங்களை கூட விற்று விட்டு வசதியாக வாழ்ந்து கொண்டிருந்தான் .  பருவ காலம் மட்டும் தாமதித்து கொண்டிருக்குமா ? அதுவும் தன் வேலையை காட்ட தொடங்கி இருந்தது . மழைக்காலம் வந்தால் அதீத மழை பொலிவும் வெயில் காலம் வந்தால் தாங்க முடியாத வெப்பமும் நிலவியது .  ஊரெங்கும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு .  அரிசி பருப்பின் விலை தங்க விலை விற்றது .  ஏழை மக்களுக்கு எட்டா கனியாகி இருந்தது . விலை வாசி ஏற்றத்தால் ரியல் எஸ்டேட் தொழிலும் நலிவடைந்து இருந்தது .  அரிசி பருப்பே வாங்க முடியாத காரணத்தினால் வீடு நிலம் என வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை .  எனவே நகுலனும் இந்த கால மாற்றத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தான் .  எனவே மனதின் ஆறுதலுக்காக கடற்கரை  சென்று இருந்தான் .  ஒரு பாக்கெட் தண்ணீரின் விலை 150 ருபாய் .  ஆனால் அவன் கண் முன்னே இந்த சமுத்திரத்தில் தன் எவ்வளவு தண்ணீர் .  பருவ மழை பருவம் இவை மாற ஆரம்பித்தாள் நம்மை சுற்றி கடல் இருந்தாலும் குடிக்க ஒரு துளி தண்ணீர் கெடைக்காது என்பதை நன்கு உணர்ந்தான் . 

கருத்துகள்

  1. நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
    சொற்பொருள் சோர்வு படும்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறள் 12- கதை 12 துப்பார்க்குத் துப்பாய

குறள் 10 - கதை 10

குறள் 11- கதை 11