இடுகைகள்

ஏப்ரல், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திருக்குறள்- அறத்துப்பால்-கடவுள் வாழ்த்து

அதிகார விளக்கம் கடவுள் உண்டு. இந்த உலகத்துக்குத் துவக்கமாக இருப்பது கடவுள்தான். கடவுளை பகுத்து அறிந்தவனை நாடி புரிந்துகொள்ளாமல் படிப்பதால் எந்தப் பயனும் இல்லை. அறிந்தவன், மலராகிய உபதேசப் பொருளில் நின்று வாழ்வான். தேவையானவர் - தேவை அற்றவர் என்ற பாகுபாடுகளை கடந்த அவரே குரு. அறியாமையை உண்டாக்கும் இரு வினைகளை கடந்தவனே இறைமையைப் புரிந்து புகழை அடைகிறான். பொறிகளுக்கு நன்றியுடன் இருந்து பொய் அற்று வாழ்பவன், சிறந்த வாழ்வை வாழ்பவனாவான். நிகரற்ற தனது உபதேசப் பொருளை அடையாமல், மனக்கவலையை மாற்றுவது இயலாது. அப்படி அறமுடன் இருப்பவரை அறிந்தால், பிறவித் துன்பமும் போகும். கோள்களைக் காட்டிலும் மேலான குணங்கள் படைத்தவரை வணங்குவது நல்லது. பிறவி என்ற பெரிய கடலைக் கடக்க இறைவனின் துணை அவசியம்.    1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.    அ என்ற எழுத்துக்கு முதலாவதுபோல, ஆதியில் பகுக்க முடியாத வானத்தை (பகவான்) முதலாகக் கொண்டது இந்த உலகம். 2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். பகுத்து அறிந்தவன் பாதம் பற்றவில்லை என்றால் படித்து என்ன பயன்? 3...

குறள் 2 - கதை 2

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்  தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன? கதை விளக்கம் : வாசு ஒரு பெரிய நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்து இருந்தான். அவன் வேலைக்கு சேர்ந்ததில் இருந்து தற்பெருமை தலைக்கேறி கொண்டது. தான்தான் உயர்ந்தவன் தன்னால் மட்டுமே எல்லாம் முடியும் என்று அடுத்தவர்களை உதாசீன படுத்தினான். எப்போதும் சிடு சிடு என்று பேசிக்கொண்டு யாரிடமும் மரியாதையாக நடந்துகொள்ளாமல் தலை கணமாய் இருந்தான். இதனால் சக ஊழியர்கள் அவனை பற்றி மேலிடத்தில் புகார் செய்தனர் . அலுவலகத்தில் அவனை இடை நீக்கம் செய்து தண்டனை கொடுக்கப்பட்டது. நாம் என்னதான் கல்வி பயின்றாலும் நல்ல வேலையில் இருந்தாலும் கடவுளிடமும் சக மனிதர்களிடத்திலும் அன்பு கொள்ளாமல் இருந்தால் அது தீமையிலேயே போய்  முடியும் .     

குறள்1- கதை-1

படம்
அகர முதல எழுத்தெல்லாம்  ஆதி   பகவன் முதற்றே உலகு அகரம் எழுத்துக்களுக்கு எல்லாம்  முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு எல்லாம் முதன்மை ஒரு ஊரில் ராம்  என்பவன் இருந்தான். சிறு வயதில் ஏழமையில் இருந்த அவனுக்கு தான் எப்படியாவது படித்து முன்னேறிவிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது . சிறு வயதில் தந்தையை இழந்த அவனுக்கு படிப்பு தூரமாகவே இருந்தது. ஆனாலும் கஷ்டப்பட்டாவது  படித்து விட வேண்டும் என்ற முடிவில் சிறு வயதிலேயே ஊறுகாய் விற்று வரும் வருமானத்தில் நோட்டு புத்தகங்கள் வாங்கி படித்தான் . பெரியவர்களை மதித்து நடந்தான் . பொய் கூறாமல் நேர்மையாக நடந்து தான் சிறு வயதில் என்னவாக ஆக வேண்டும் என்ற எண்ணம் கொண்டானோ அவ்வாறே ஆகினான்.  ஆகவே கடவுள் என்பது வெறும் சிலைகள் மட்டும் இல்லாமல் உணர்வுகளையும் அடிப்படையாக கொண்டது . ராம்  தன்  மீது நம்பிக்கை வைத்து பொய் கூறாமல், பெரியவர்களை மதித்து நேர்மையாக நடந்ததால் இன்று வாழ்வில் முன்னேறி உள்ளான் . இந்த இடத்தில் கடவுள் என்பது இந்த உணர்வுகளை குறிக்கின்றது. எனவே எல்லாவற்றிற்கும் முதன்மையாக இருக்கும் கடவுளுக்கு நாம் செல...