இடுகைகள்

மார்ச், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குறள் 5 - கதை 5

படம்
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. விளக்கம்: கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம், அறியாமையால் வரும் நல்வினை, தீவினை ஆகிய இரு வினைகளும் வந்து சேர்வதில்லை. கதை: ஒரு ஊர்ல கந்தன்  என்பவன் வாழந்து வந்தான். அவன் ஒரு வாத்து  வைத்து வளர்த்து வந்தான். தினம் வாத்துக்கு  நல்ல தீனியிட்டு பராமரித்து வந்தான். கடவுள் பக்தியிலும் அவன் மிகுந்த ஆர்வமுடையவனாய் திகழ்ந்தான். மனமகிழ்ந்த கடவுள் அவனுக்கு வேண்டிய வரம் வழங்க அவன் முன் தோன்றினார். அப்போது கந்தன் நீங்கள் என் கண் முன் தோன்றியது பெரிய வரம். எனக்கு இதை விட பெரிய வரம் வேண்டாம் என்று கூறினான். தினம் உங்கள் பாதங்களை வணங்கி தொழுவதே பெரிய பாக்கியம் என்றும் கூறினான். இதனால் கடவுள் மனமகிழ்ந்து கடவுளாகிய எனையும், எனக்கு இணையான மனதின் பேச்சையும் கேட்டு நடப்பவர்கள் வாழ்வில் எந்த வித துன்பமும் அவனை அறியாமல் வந்து சேராது என கூறினார். அதோடு பொன் முட்டை இடும் வாத்தையும் கொடுத்து விட்டு சென்றார்.அந்த வாத்தை உபயோகித்து ஊரில் உள்ள அனைவருக்கும் அவனால் இயன்ற உதவிகளையும் புரிந்து வந்தான். எனவே நம் மன...

குறள் 4 - கதை 4

படம்
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல . விளக்கம்:    தேவை தேவையற்றது என்று பாரபட்சம் பார்க்காதவரை அடைந்தவருக்கு துன்பம் என்றும் இல்லை. கதை: ஒரு விவசாயி தன் வீட்டில் ஆடுகள் நிறைய வளர்த்து வந்தார். அதில் உள்ள வயதில் மூத்த ஆடு எப்போதுமே தன் முதலாளி எங்கு கூட்டி செல்கிறாரோ அங்கேயே மேயும். அந்த மூத்த ஆட்டினையே பின்பற்றி மற்ற ஆடுகளும் மேயும். இதில் ஒரு ஆட்டுக்கு மட்டும் விருப்பம் இல்லை. எப்போது பார்த்தாலும் ஒரே இடத்திற்கு செல்வது சலிப்பாக உள்ளது. எதிர் வீட்டு தோட்டத்தில் எவ்வளவு பச்சை புற்கள் நிறைந்துள்ளன. அவை மட்டும் கிடைத்தால் எப்படி இருக்கும் என நினைத்தது மட்டும் இல்லாமல் தனக்கு கூட்டாளியாக சில ஆடுககளை சேர்த்து கொண்டது.   விவசாயி வழக்கம் போல் தன் ஆடுகளை மேய்ச்சலுக்கு இட்டு சென்றார். திட்டம் போட்ட ஆடும் அதன் கூட்டாளிகளும் எதிர்த்த வீட்டு தோட்டத்திற்கு தாவி குதித்து ஓடியது. அங்கு காவலாளி குச்சியை எடுத்து அடித்ததில் ஆட்டுக்கு கால் ஒடிந்தது.  தன் விருப்பு வெறுப்புகளை துறந்து மூத்த ஆடு பின் சென்ற மற்ற ஆடுகள் நிம்மதியாக சுற்றி திரிந்தன. தன் விருப்ப...

குறள் 3 - கதை 3

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். மலராகிய உள்ளத்தில் உறையும் கடவுளின் உபதேசத்தை அடைந்தவர் இந்தப் பூமியில் நீண்ட காலம் வாழ்வார்.   ரவியும் ராகுலும் சிறந்த நண்பர்கள். அவர்களின் பெற்றோர்கள் எப்பொழுதும் சிறந்த அறிவுரைகளை கூறுவார்கள். இருவரும் பெற்றோரின் பேச்சை மீறியதில்லை. தற்போது 9ம் வகுப்பிற்கு தேர்ச்சி பெற்று வேறு பள்ளியில் சேர்ந்தனர். அங்கு சில மோசமான நண்பர்களின் பழக்கத்தால் ராகுலின் பாதை மாறியது. படிப்பில் கவனம் சிதறியது. கடவுளுக்கு சமமான பெற்றோரின் பேச்சை அவன் மதிக்கவில்லை.  தேர்வுகளில் தோல்வியுற்றான். ராகுலின் பெற்றோர் அவனுக்கு அறிவுரை வழங்கினார்கள். ஆனால் அது எதையுமே அவன் காதில் வாங்கி கொள்வதாய் இல்லை. ஆனால் ரவியோ வேறு எங்கும் கவனம் சிதறாமல் படிப்பில் ஆர்வமாய் இருந்தான். பெற்றோரின் அறிவுரைக்கேற்ப நடந்து வகுப்பில் முதல் மாணவனாய் திகழ்ந்தான் . எனவே கடவுளுக்கு சமமான பெற்றோரின் உபதேசங்களை கேட்டு நடப்பவர்கள் இந்த உலகில் மகிழ்ச்சியாய் நீண்ட காலம் வாழ்வர் .