இடுகைகள்

ஏப்ரல், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குறள் 7 - கதை 7

படம்
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. விளக்கம்: ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை. மு.வரதராசனார் தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது. சாலமன் பாப்பையா தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம். கலைஞர் ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை. கதை: ராம் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான். இந்த நிறுவனத்தில் சேரும் முன் அவனுக்கு வேறு எங்குமே வேலை கிடைக்கவில்லை. ஏறி இறங்காத அலுவலகங்களே இல்லை. ஒரு கட்டத்தில் தனக்கு வேலை கிடைக்காது என்ற எண்ணத்தில் ஊருக்கு செல்ல முடிவெடுத்தான். அப்போது அவன் தங்கி இருக்கு அறையின் ஜன்னலில் அமர்ந்து சாலையை பார்த்து கொண்டு இருந்தான். அப்போது ஒரு கண் தெரியாத ஒருவர் பேனா விற்று கொண்டிருந்தார். இவரிடம் போய் இந்த பேனாவை யார் வாங்க போகிறார்கள் என்று நினைத்து தானே ...

பார்வையாளர்கள் கவனத்திற்கு

 பார்வையாளர்கள் கவனத்திற்கு:  தங்களது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. நீங்கள் இடும் கருத்துக்கள் என் சரி தவறுகளை கண்டறிந்து மேலும் முன்னேற ஒரு வாய்ப்பாக அமையும். பார்வையிட்டதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

குறள் 6 - கதை 6

படம்
 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். விளக்கம்: மு.வ : ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர் சாலமன் பாப்பையா : மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார் கதை: ஒரு ஊரில் மனோகர் என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் எப்பொழுதும் ஆடம்பரமாக வாழ ஆசை படுபவன். கண்களுக்கு பிடித்த பொருள்களையெல்லாம் வாங்கி வைப்பான்.அவன் செவிகளில் யாராவது அவனை விட விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி விட்டார்கள் என தெரிந்தால் போதும் உடனே அதை எப்படியாது அடைய முயற்சிப்பான். மூக்கை துளைக்கும் வாசனை திரவியமும் வாய்க்கு ருசியான சாப்பாடு என ஐம்புலன்களையும் அடக்க தெரியாமல் வாழந்து வந்தான். அதே ஊரில் செல்வம் என்பவன் இருந்தான். தான் தினம் சம்பாதித்து வரும் பணத்தில் தனது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வான். அவன் மனம் எப்பொழுதும் எதற்கும் ஆசைப்பட்டது இல்லை.  மனோகரிடம் என்ன வசதி இருந்தாலும் எவ்வளவு பணம் இருந்தாலு...