இடுகைகள்

ஜூன், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குறள் 10 - கதை 10

படம்
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். மு. வரதராசன் உரை :  இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது. சாலமன் பாப்பையா உரை :  கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார் கலைஞர் உரை :  வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்   கதை : ஒரு ஊர்ல கண்ணதாசன் அப்படினு ஒருத்தர் இருந்தாரு. அவருக்கு இப்போ அறுபது வயது. அவருக்கு மகிழன் னு ஒரு பையன் இருந்தான். அவனுக்கு வயது 25. இன்றைக்கு மகிழன் வாழ்க்கையில ஒரு முக்கியமான நாள்.  ஆம், மகிழனுக்கு ஒரு மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனத்துல நல்ல சம்பளத்துள வேலை கிடைச்சுருக்கு. இந்த மகிழ்ச்சியான செய்தியோடு மகிழன் சைக்கிளை மிதித்துக்கொண்டு வேகமாக பீமாராஜ் ஆசிரியரை சந்திக்க சென்றான்.  பீமாராஜ் ஆசிரியர்தான் மகிழனின் உயர்ந்த நிலைக்கு காரணம். ஆம்,  பீமாராஜ் வாத்தியார்தான் மகிழன் 10 முதல் 12 வகுப்பு...

குறள் 9 - கதை 9

படம்
குறள் 9 : கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. சாலமன் பாப்பையா விளக்கம்: எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே கலைஞர் விளக்கம்: உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும் கதை: ஒரு ஊரில் சின்னப்பன் என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் சிறுவயதிலேயே மதுவிற்கு அடிமை ஆனான். அதே ஊரில் கண்ணப்பன் என்பவன் வாழ்ந்து வந்தான். சின்னப்பன் , கண்ணப்பனும் ஒன்றாக படித்தவர்கள். கண்ணப்பன் சிறுவயது முதலே நன்றாக படித்து வந்தான். பெரியவர்களின் சொல் கேட்டு அவர்கள் கூறும் வழியில் நடந்து இன்று பெரிய வேலையில் உள்ளான். ஆனால் சின்னப்பன் மதுவிற்கு அடிமையானதால் ஒழுங்காகப் படிக்க முடியவில்லை. அவன் மனம் போன போக்கிலே வாழ்ந்து வந்தான். அவனது பெற்றோர் சொல் பேச்சு கேட்க வில்லை பெரியவர்கள் சொல்பேச்சு கேட்க வில்லை. ஒருநாள் மது அருந்திவிட்டு ஒரு சாக்கடையில் விழுந்து கிடந்தான்....