இடுகைகள்

குறள் 5 - கதை 5

படம்
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. விளக்கம்: கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம், அறியாமையால் வரும் நல்வினை, தீவினை ஆகிய இரு வினைகளும் வந்து சேர்வதில்லை. கதை: ஒரு ஊர்ல கந்தன்  என்பவன் வாழந்து வந்தான். அவன் ஒரு வாத்து  வைத்து வளர்த்து வந்தான். தினம் வாத்துக்கு  நல்ல தீனியிட்டு பராமரித்து வந்தான். கடவுள் பக்தியிலும் அவன் மிகுந்த ஆர்வமுடையவனாய் திகழ்ந்தான். மனமகிழ்ந்த கடவுள் அவனுக்கு வேண்டிய வரம் வழங்க அவன் முன் தோன்றினார். அப்போது கந்தன் நீங்கள் என் கண் முன் தோன்றியது பெரிய வரம். எனக்கு இதை விட பெரிய வரம் வேண்டாம் என்று கூறினான். தினம் உங்கள் பாதங்களை வணங்கி தொழுவதே பெரிய பாக்கியம் என்றும் கூறினான். இதனால் கடவுள் மனமகிழ்ந்து கடவுளாகிய எனையும், எனக்கு இணையான மனதின் பேச்சையும் கேட்டு நடப்பவர்கள் வாழ்வில் எந்த வித துன்பமும் அவனை அறியாமல் வந்து சேராது என கூறினார். அதோடு பொன் முட்டை இடும் வாத்தையும் கொடுத்து விட்டு சென்றார்.அந்த வாத்தை உபயோகித்து ஊரில் உள்ள அனைவருக்கும் அவனால் இயன்ற உதவிகளையும் புரிந்து வந்தான். எனவே நம் மன...

குறள் 4 - கதை 4

படம்
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல . விளக்கம்:    தேவை தேவையற்றது என்று பாரபட்சம் பார்க்காதவரை அடைந்தவருக்கு துன்பம் என்றும் இல்லை. கதை: ஒரு விவசாயி தன் வீட்டில் ஆடுகள் நிறைய வளர்த்து வந்தார். அதில் உள்ள வயதில் மூத்த ஆடு எப்போதுமே தன் முதலாளி எங்கு கூட்டி செல்கிறாரோ அங்கேயே மேயும். அந்த மூத்த ஆட்டினையே பின்பற்றி மற்ற ஆடுகளும் மேயும். இதில் ஒரு ஆட்டுக்கு மட்டும் விருப்பம் இல்லை. எப்போது பார்த்தாலும் ஒரே இடத்திற்கு செல்வது சலிப்பாக உள்ளது. எதிர் வீட்டு தோட்டத்தில் எவ்வளவு பச்சை புற்கள் நிறைந்துள்ளன. அவை மட்டும் கிடைத்தால் எப்படி இருக்கும் என நினைத்தது மட்டும் இல்லாமல் தனக்கு கூட்டாளியாக சில ஆடுககளை சேர்த்து கொண்டது.   விவசாயி வழக்கம் போல் தன் ஆடுகளை மேய்ச்சலுக்கு இட்டு சென்றார். திட்டம் போட்ட ஆடும் அதன் கூட்டாளிகளும் எதிர்த்த வீட்டு தோட்டத்திற்கு தாவி குதித்து ஓடியது. அங்கு காவலாளி குச்சியை எடுத்து அடித்ததில் ஆட்டுக்கு கால் ஒடிந்தது.  தன் விருப்பு வெறுப்புகளை துறந்து மூத்த ஆடு பின் சென்ற மற்ற ஆடுகள் நிம்மதியாக சுற்றி திரிந்தன. தன் விருப்ப...

குறள் 3 - கதை 3

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். மலராகிய உள்ளத்தில் உறையும் கடவுளின் உபதேசத்தை அடைந்தவர் இந்தப் பூமியில் நீண்ட காலம் வாழ்வார்.   ரவியும் ராகுலும் சிறந்த நண்பர்கள். அவர்களின் பெற்றோர்கள் எப்பொழுதும் சிறந்த அறிவுரைகளை கூறுவார்கள். இருவரும் பெற்றோரின் பேச்சை மீறியதில்லை. தற்போது 9ம் வகுப்பிற்கு தேர்ச்சி பெற்று வேறு பள்ளியில் சேர்ந்தனர். அங்கு சில மோசமான நண்பர்களின் பழக்கத்தால் ராகுலின் பாதை மாறியது. படிப்பில் கவனம் சிதறியது. கடவுளுக்கு சமமான பெற்றோரின் பேச்சை அவன் மதிக்கவில்லை.  தேர்வுகளில் தோல்வியுற்றான். ராகுலின் பெற்றோர் அவனுக்கு அறிவுரை வழங்கினார்கள். ஆனால் அது எதையுமே அவன் காதில் வாங்கி கொள்வதாய் இல்லை. ஆனால் ரவியோ வேறு எங்கும் கவனம் சிதறாமல் படிப்பில் ஆர்வமாய் இருந்தான். பெற்றோரின் அறிவுரைக்கேற்ப நடந்து வகுப்பில் முதல் மாணவனாய் திகழ்ந்தான் . எனவே கடவுளுக்கு சமமான பெற்றோரின் உபதேசங்களை கேட்டு நடப்பவர்கள் இந்த உலகில் மகிழ்ச்சியாய் நீண்ட காலம் வாழ்வர் .

திருக்குறள்- அறத்துப்பால்-கடவுள் வாழ்த்து

அதிகார விளக்கம் கடவுள் உண்டு. இந்த உலகத்துக்குத் துவக்கமாக இருப்பது கடவுள்தான். கடவுளை பகுத்து அறிந்தவனை நாடி புரிந்துகொள்ளாமல் படிப்பதால் எந்தப் பயனும் இல்லை. அறிந்தவன், மலராகிய உபதேசப் பொருளில் நின்று வாழ்வான். தேவையானவர் - தேவை அற்றவர் என்ற பாகுபாடுகளை கடந்த அவரே குரு. அறியாமையை உண்டாக்கும் இரு வினைகளை கடந்தவனே இறைமையைப் புரிந்து புகழை அடைகிறான். பொறிகளுக்கு நன்றியுடன் இருந்து பொய் அற்று வாழ்பவன், சிறந்த வாழ்வை வாழ்பவனாவான். நிகரற்ற தனது உபதேசப் பொருளை அடையாமல், மனக்கவலையை மாற்றுவது இயலாது. அப்படி அறமுடன் இருப்பவரை அறிந்தால், பிறவித் துன்பமும் போகும். கோள்களைக் காட்டிலும் மேலான குணங்கள் படைத்தவரை வணங்குவது நல்லது. பிறவி என்ற பெரிய கடலைக் கடக்க இறைவனின் துணை அவசியம்.    1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.    அ என்ற எழுத்துக்கு முதலாவதுபோல, ஆதியில் பகுக்க முடியாத வானத்தை (பகவான்) முதலாகக் கொண்டது இந்த உலகம். 2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். பகுத்து அறிந்தவன் பாதம் பற்றவில்லை என்றால் படித்து என்ன பயன்? 3...

குறள் 2 - கதை 2

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்  தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன? கதை விளக்கம் : வாசு ஒரு பெரிய நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்து இருந்தான். அவன் வேலைக்கு சேர்ந்ததில் இருந்து தற்பெருமை தலைக்கேறி கொண்டது. தான்தான் உயர்ந்தவன் தன்னால் மட்டுமே எல்லாம் முடியும் என்று அடுத்தவர்களை உதாசீன படுத்தினான். எப்போதும் சிடு சிடு என்று பேசிக்கொண்டு யாரிடமும் மரியாதையாக நடந்துகொள்ளாமல் தலை கணமாய் இருந்தான். இதனால் சக ஊழியர்கள் அவனை பற்றி மேலிடத்தில் புகார் செய்தனர் . அலுவலகத்தில் அவனை இடை நீக்கம் செய்து தண்டனை கொடுக்கப்பட்டது. நாம் என்னதான் கல்வி பயின்றாலும் நல்ல வேலையில் இருந்தாலும் கடவுளிடமும் சக மனிதர்களிடத்திலும் அன்பு கொள்ளாமல் இருந்தால் அது தீமையிலேயே போய்  முடியும் .     

குறள்1- கதை-1

படம்
அகர முதல எழுத்தெல்லாம்  ஆதி   பகவன் முதற்றே உலகு அகரம் எழுத்துக்களுக்கு எல்லாம்  முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு எல்லாம் முதன்மை ஒரு ஊரில் ராம்  என்பவன் இருந்தான். சிறு வயதில் ஏழமையில் இருந்த அவனுக்கு தான் எப்படியாவது படித்து முன்னேறிவிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது . சிறு வயதில் தந்தையை இழந்த அவனுக்கு படிப்பு தூரமாகவே இருந்தது. ஆனாலும் கஷ்டப்பட்டாவது  படித்து விட வேண்டும் என்ற முடிவில் சிறு வயதிலேயே ஊறுகாய் விற்று வரும் வருமானத்தில் நோட்டு புத்தகங்கள் வாங்கி படித்தான் . பெரியவர்களை மதித்து நடந்தான் . பொய் கூறாமல் நேர்மையாக நடந்து தான் சிறு வயதில் என்னவாக ஆக வேண்டும் என்ற எண்ணம் கொண்டானோ அவ்வாறே ஆகினான்.  ஆகவே கடவுள் என்பது வெறும் சிலைகள் மட்டும் இல்லாமல் உணர்வுகளையும் அடிப்படையாக கொண்டது . ராம்  தன்  மீது நம்பிக்கை வைத்து பொய் கூறாமல், பெரியவர்களை மதித்து நேர்மையாக நடந்ததால் இன்று வாழ்வில் முன்னேறி உள்ளான் . இந்த இடத்தில் கடவுள் என்பது இந்த உணர்வுகளை குறிக்கின்றது. எனவே எல்லாவற்றிற்கும் முதன்மையாக இருக்கும் கடவுளுக்கு நாம் செல...